Search This Blog

Friday, 9 December 2011

முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே?
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
வேற்று தாய் மக்களும்கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன்
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!

Friday, 18 November 2011